/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் நகராட்சியில் மூன்று சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலி: பணியை கண்காணிப்பதில் சிக்கல்
/
திருவள்ளூர் நகராட்சியில் மூன்று சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலி: பணியை கண்காணிப்பதில் சிக்கல்
திருவள்ளூர் நகராட்சியில் மூன்று சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலி: பணியை கண்காணிப்பதில் சிக்கல்
திருவள்ளூர் நகராட்சியில் மூன்று சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலி: பணியை கண்காணிப்பதில் சிக்கல்
UPDATED : அக் 11, 2024 02:22 AM
ADDED : அக் 11, 2024 02:06 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் மூன்று சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால், சுகாதார பணியை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் நகராட்சி, கடந்த சில மாதங்களுக்கு முன், தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நகராட்சியில், 27 வார்டுகளில், 19,000க்கும் மேற்பட்ட வீடுகளில், 82,000 பேர் வசித்து வருகின்றனர்.
வீடு, கடைகளில் இருந்து, மட்கும் மற்றும் மட்காத குப்பை என, 45,000 கிலோ குப்பை வெளியேற்றப்படுகிறது. இந்த குப்பையை தனியார் ஊழியர்கள், 162 பேர் வீடுகள்தோறும் சென்று சேகரித்து வருகின்றனர்.
தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், இங்கு ஒரு சுகாதார அலுவலர், நான்கு சுகாதார ஆய்வாளர்கள் பணி நிரப்ப வேண்டும். ஆனால், தற்போது ஒரு சுகாதார அலுவலர் மற்றும் ஒரு ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளனர். மூன்று ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், இருவர் மட்டுமே, நகராட்சியில் குப்பை அகற்றும் பணியை கண்காணித்து வருகின்றனர். இதனால், பணிச்சுமை ஏற்பட்டு வருவதுடன், பிற பகுதிகளுக்கு கண்காணிப்பிற்காக செல்ல காலவிரயம் ஏற்படுகிறது.
எனவே, நகராட்சி நிர்வாக துறை, காலியாக உள்ள மூன்று சுகாதார ஆய்வாளர் பணிக்கு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என, நகரவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.