sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர் நகராட்சியில் மூன்று சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலி: பணியை கண்காணிப்பதில் சிக்கல்

/

திருவள்ளூர் நகராட்சியில் மூன்று சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலி: பணியை கண்காணிப்பதில் சிக்கல்

திருவள்ளூர் நகராட்சியில் மூன்று சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலி: பணியை கண்காணிப்பதில் சிக்கல்

திருவள்ளூர் நகராட்சியில் மூன்று சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலி: பணியை கண்காணிப்பதில் சிக்கல்


UPDATED : அக் 11, 2024 02:22 AM

ADDED : அக் 11, 2024 02:06 AM

Google News

UPDATED : அக் 11, 2024 02:22 AM ADDED : அக் 11, 2024 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் மூன்று சுகாதார ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளதால், சுகாதார பணியை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் நகராட்சி, கடந்த சில மாதங்களுக்கு முன், தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நகராட்சியில், 27 வார்டுகளில், 19,000க்கும் மேற்பட்ட வீடுகளில், 82,000 பேர் வசித்து வருகின்றனர்.

வீடு, கடைகளில் இருந்து, மட்கும் மற்றும் மட்காத குப்பை என, 45,000 கிலோ குப்பை வெளியேற்றப்படுகிறது. இந்த குப்பையை தனியார் ஊழியர்கள், 162 பேர் வீடுகள்தோறும் சென்று சேகரித்து வருகின்றனர்.

தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால், இங்கு ஒரு சுகாதார அலுவலர், நான்கு சுகாதார ஆய்வாளர்கள் பணி நிரப்ப வேண்டும். ஆனால், தற்போது ஒரு சுகாதார அலுவலர் மற்றும் ஒரு ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளனர். மூன்று ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால், இருவர் மட்டுமே, நகராட்சியில் குப்பை அகற்றும் பணியை கண்காணித்து வருகின்றனர். இதனால், பணிச்சுமை ஏற்பட்டு வருவதுடன், பிற பகுதிகளுக்கு கண்காணிப்பிற்காக செல்ல காலவிரயம் ஏற்படுகிறது.

எனவே, நகராட்சி நிர்வாக துறை, காலியாக உள்ள மூன்று சுகாதார ஆய்வாளர் பணிக்கு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என, நகரவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us