/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் - சரக்கு ஆட்டோ மோதல் மூன்று பேர் காயம்
/
பைக் - சரக்கு ஆட்டோ மோதல் மூன்று பேர் காயம்
ADDED : ஜன 12, 2025 08:41 PM
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த, ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் தனுஷ், 20; இவர், இரு நண்பர்களுடன், ஸ்பிளன்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரிபேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
பின், நண்பகலில் அதே வாகனத்தில் மூன்று பேரும் திருத்தணி நோக்கி வந்து கொண்டிருந்தனர். கே.ஜி.கண்டிகை அருகே வந்த போது, பால்கேன் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தனுஷ் பலத்த காயமும், அவரது இரு நண்பர்களுக்கு லேசான காயமும் அடைந்தனர்.
அவ்வழியாக வந்தவர்கள் மூன்று பேரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்ற தனுஷ் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.