sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் ரயிலில் அடிபட்டு மூன்று பேர் பலி

/

ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் ரயிலில் அடிபட்டு மூன்று பேர் பலி

ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் ரயிலில் அடிபட்டு மூன்று பேர் பலி

ஒரே நாளில் வெவ்வேறு இடத்தில் ரயிலில் அடிபட்டு மூன்று பேர் பலி


ADDED : ஏப் 12, 2025 12:17 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிபட்டு மூன்று பேர் பலியாகினர்.

சென்னை - திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில், நேற்று காலை திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ், 35 வயதுள்ள ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடக்கும் போது, அவ்வழியாக வந்த மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

அதேபோல், புட்லூர் - செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தை கடந்த 35 வயதுள்ள ஆண் ஒருவர், விரைவு ரயிலில் அடிபட்டு பலியானார். மேலும், செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் மோதியதில், மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே போலீசார், சடலங்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், இறந்தவர்கள் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us