sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் மின் வினியோகம் வாரிய குளறுபடியால் அவதி

/

திருத்தணியில் மின் வினியோகம் வாரிய குளறுபடியால் அவதி

திருத்தணியில் மின் வினியோகம் வாரிய குளறுபடியால் அவதி

திருத்தணியில் மின் வினியோகம் வாரிய குளறுபடியால் அவதி


ADDED : அக் 03, 2025 10:09 PM

Google News

ADDED : அக் 03, 2025 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:'பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவித்து, பின் வழக்கம்போல மின் வினியோகம் செய்யப்படும்' என்ற மின்துறையின் அறிவிப்பால், வியாபாரிகள் கடும் அவதியடைந்தனர்.

திருத்தணி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக, மாதந்தோறும் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று காலை, திருத்தணி மின்வாரிய அதிகாரிகள், 'திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும்' என, அறிவித்திருந்தனர்.

நேற்று இரவு 7:00 மணிக்கு, 'மின் வினியோகம் வழக்கம்போல வழங்கப்படும்' எனவும், வரும் 8ம் தேதி மாதாந்திர பராமரிப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும்' எனவும் அறிவித்தனர்.

இதுகுறித்து, திருத்தணியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

மி ன் நிறுத்தம் செய்வதற்கு முன், அந்த நாட்களில் ஏதேனும் அரசு நிகழ்ச்சிகள், முக்கிய விழாக்கள் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக அறிவிக்கின்றனர். இதனால், அரசு அதிகாரிகள், வியாபாரிகள் மற்றும் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

திருத்தணி மின்துறை அதிகாரிகளிடம் கேட்டால், மாவட்ட அதிகாரிகளின் உத்தரவின்படி, மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அலட்சியமாக கூறுகின்றனர். எனவே, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us