/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பீரோவில் இருந்த பணம், நகை மாயம்
/
பீரோவில் இருந்த பணம், நகை மாயம்
ADDED : அக் 03, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:வீட்டின் பீரோவில் வைத்திருந்த, 21 சவரன் நகை, 3.50 லட்சம் ரூபாய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமத்தில் வசித்து வருபவர் பாபு, 54. கீழ்தளத்தில் மளிகை கடையும், முதல் தளத்தில் வீடும் உள்ளது.
வீட்டில் உள்ள பீரோவில், 21 சவரன் நகை, 3.50 லட்சம் ரூபாய் வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் பார்த்தபோது, அவை அனைத்தும் மாயமானதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இது குறித்து, பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.