/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்:புகார் பெட்டி;ஜி.என்.டி., சாலையோரம் குப்பை குவித்து எரிப்பு
/
திருவள்ளூர்:புகார் பெட்டி;ஜி.என்.டி., சாலையோரம் குப்பை குவித்து எரிப்பு
திருவள்ளூர்:புகார் பெட்டி;ஜி.என்.டி., சாலையோரம் குப்பை குவித்து எரிப்பு
திருவள்ளூர்:புகார் பெட்டி;ஜி.என்.டி., சாலையோரம் குப்பை குவித்து எரிப்பு
ADDED : ஜூன் 27, 2024 01:32 AM

ஜி.என்.டி., சாலையோரம் குப்பை குவித்து எரிப்பு
கும்மிடிப்பூண்டி நகரை ஒட்டியுள்ள தேர்வழி, பெத்திக்குப்பம் ஆகிய இரு ஊராட்சிகளில், 30க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இரு ஊராட்சிகளிலும் போதிய அளவில் துாய்மை பணியாளர்கள் இல்லாததால், இங்கு சேகராகும் குப்பை, ஜி.என்.டி., சாலையோரம் மக்கள் வீசி செல்கின்றனர்.
அப்படி குவிக்கப்படும் குப்பையை, ஊராட்சி பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். இதனால், மக்களின் சுகாதாரம் பாதிப்பதுடன், குப்பை குவியலால் ஜி.என்.டி., சாலை முழுதும் பொலிவிழந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளை கணக்கில் கொண்டு, இரு ஊராட்சிகளிலும் போதிய துாய்மை பணியாளர்களை நியமித்து கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.கமலநாதன், கும்மிடிப்பூண்டி.
எரியாத தெருவிளக்குகளால்
மணவாளநகர் வாசிகள் அவதி
கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகர் மற்றும் கபிலர் நகர் அழகிரி தெரு, லெனின் தெரு, புத்தர் தெரு உட்பட பல தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் உள்ள விளக்குகள், 10 நாட்களாக எரியவில்லை.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் பகுதிவாசிகள் தெருவில் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணவாளநகர் பகுதியில் தெரு மின் விளக்குகளை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜேஷ், மணவாள நகர்.
நெடுஞ்சாலையோரம் குப்பை
வாகன ஓட்டிகள் முகம்சுளிப்பு
கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது ஒண்டிக்குப்பம். இப்பகுதியில் உள்ள திருமழிசை செல்லும் நெடுஞ்சாலையோரம் குப்பை அகற்றப்படாமல் குவிந்து வருகிறது.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், முறையாக அகற்றப்படுவதில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் மற்றும் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுத்து, முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ், மணவாள நகர்.