/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட...கட்டுப்பாடு! :'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைக்கு தடை
/
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட...கட்டுப்பாடு! :'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைக்கு தடை
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட...கட்டுப்பாடு! :'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைக்கு தடை
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட...கட்டுப்பாடு! :'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' சிலைக்கு தடை
ADDED : ஆக 29, 2024 11:37 PM
திருவள்ளூர்:விநாயகர் சதுர்த்தியன்று, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' உள்ளிட்ட ரசாயன வண்ணம் கொண்ட சிலைகளை தவிர்க்க வேண்டும். மாற்றாக, இயற்கை சிலை மற்றும் எளிதில் கரையும் பொருட்களை கொண்டு சிலைகளை அலங்கரிக்க வேண்டும், என, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி திருவிழா, வரும், செப்.7ல் நாடு முழுதும் கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் தாங்கள் விரும்பும் வகையில், விநாயகர் சிலைகளை வடிவமைத்து, வீடு, கோவில், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பிரதிஷ்டை செய்து, வழிபடுவது வழக்கம்.
திருவள்ளூர் மாவட்டத்தில், இந்த ஆண்டும், வெகு விமர்சையாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளுர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பாளர்களுக்கு, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள், நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளபடி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
'பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் 'தெர்மாகோல்' கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.
சிலைகளுக்கு வர்ணம் பூசவும், அழகு படுத்தவும் நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்த கூடாது. சிலைகளின் மீது, 'எனாமல்' மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ண பூச்சுகளை பயன்படுத்த கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறை படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு பொதுமக்கள் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.