sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கோவிலில் இன்று புஷ்பாஞ்சலி

/

திருத்தணி கோவிலில் இன்று புஷ்பாஞ்சலி

திருத்தணி கோவிலில் இன்று புஷ்பாஞ்சலி

திருத்தணி கோவிலில் இன்று புஷ்பாஞ்சலி


ADDED : நவ 07, 2024 01:14 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 2ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. தினமும் அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவசம், வெள்ளி கவசம், சந்தன காப்பு போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வந்தது.

மேலும், காலை 8:30 மணிக்கு உற்சவர் சண்முகர் காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின், உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது. காலை 8:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்து வருகிறது.

இன்று மாலை 5:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. நாளை காலை 8:00 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவுபெறுகிறது.

ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் முருகப்பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us