/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இன்று ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர் முகாம்
/
இன்று ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர் முகாம்
ADDED : டிச 13, 2025 05:56 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ரேஷன் கார்டுதாரர் சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 9 வட்ட வழங்கல் அலுவலகத்தில், இன்று குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் நடக்கிறது.
பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும், முன்னுரிமை குடும்ப அட்டை, அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டை வைத்திருப்போர், குடும்ப அட்டையில் உள்ள, அனைத்து உறுப்பினர்களும் தங்களது விரல்ரேகையை, ரேஷன் கடைகளில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

