/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தேர்தல் ஆணைய அலுவலர் அறிவுரை
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தேர்தல் ஆணைய அலுவலர் அறிவுரை
ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தேர்தல் ஆணைய அலுவலர் அறிவுரை
ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தேர்தல் ஆணைய அலுவலர் அறிவுரை
ADDED : டிச 13, 2025 05:58 AM
திருவள்ளூர்: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணியை தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செயல்படுத்துமாறு, மத்திய தேர்தல் ஆணைய அலுவலர் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில், 3,699 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. அந்த மையங்களில், தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, சேமிப்பு கிடங்கு களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வரும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது.
பெங்களூர் 'பெல்' நிறுவனத்தைச் சேர்ந்த, 13 பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாதம் வரை நடைபெற உள்ள பணியை இந்திய தேர்தல் ஆணையத்தின் 'நோடல்' அலுவலர், டியோடஸ் டட்டா நேற்று நேரில் பா ர்வையிட்டார்.
அப்போது, முதல்நிலை சரிபார்ப்பு பணி மேற்கொள்ளும் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, இந்திய தேர் தல் ஆணையத்தின் வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
கலெக்டர் பிரதாப் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

