sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தேர்தல் ஆணைய அலுவலர் அறிவுரை

/

 ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தேர்தல் ஆணைய அலுவலர் அறிவுரை

 ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தேர்தல் ஆணைய அலுவலர் அறிவுரை

 ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி தேர்தல் ஆணைய அலுவலர் அறிவுரை


ADDED : டிச 13, 2025 05:58 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணியை தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி செயல்படுத்துமாறு, மத்திய தேர்தல் ஆணைய அலுவலர் அறிவுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில், 3,699 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. அந்த மையங்களில், தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள, சேமிப்பு கிடங்கு களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

வரும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி துவங்கியுள்ளது.

பெங்களூர் 'பெல்' நிறுவனத்தைச் சேர்ந்த, 13 பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாதம் வரை நடைபெற உள்ள பணியை இந்திய தேர்தல் ஆணையத்தின் 'நோடல்' அலுவலர், டியோடஸ் டட்டா நேற்று நேரில் பா ர்வையிட்டார்.

அப்போது, முதல்நிலை சரிபார்ப்பு பணி மேற்கொள்ளும் பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, இந்திய தேர் தல் ஆணையத்தின் வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.

கலெக்டர் பிரதாப் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us