sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிழிந்து தொங்கும் பேனர்கள்: நீதிமன்ற உத்தரவு என்னாச்சு?

/

கிழிந்து தொங்கும் பேனர்கள்: நீதிமன்ற உத்தரவு என்னாச்சு?

கிழிந்து தொங்கும் பேனர்கள்: நீதிமன்ற உத்தரவு என்னாச்சு?

கிழிந்து தொங்கும் பேனர்கள்: நீதிமன்ற உத்தரவு என்னாச்சு?


ADDED : ஏப் 18, 2025 02:12 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமழிசை:நெடுஞ்சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் வைக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும், சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை மற்றும் உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் மற்றும் மொபைல்போன் டவர்கள் வைப்பது அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் பலத்த மழையுடன் காற்று வீசியதால், நெடுஞ்சாலையோரம் உள்ள விளம்பர பேனர்கள் ஆங்காங்கே கிழிந்து தொங்கி கிடப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

சில இடங்களில் நெடுஞ்சாலையோர மின்கம்பிகள் மீதும் விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்குகின்றன. மேலும், விளம்பர பேனர்கள் வைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அதன்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்தி வைக்க வேண்டும்.

ஆனால், நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது வைக்கப்படும் 'மெகா சைஸ்' விளம்பர பேனர்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டு வருகின்றன. இதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

எனவே, நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர் வைப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us