sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாலையோரம் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

/

சாலையோரம் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

சாலையோரம் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

சாலையோரம் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : நவ 01, 2025 12:15 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து பாதிக்கிறது.

கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பகுதியில், ரயில் மேம்பாலமும், சென்னை கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையும் இணையும் இடம், எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் முக்கிய சந்திப்பாகும். அந்த இடம் பார்க்கிங் பகுதியாக மாறி வருகிறது.

இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரத்திலும், ஏராளமான கனரக வாகனங்கள் அங்குள்ள பெரும் பகுதி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

இதனால் அந்த சந்திப்பில், மூன்று திசைகளில் இருந்து வரும் வாகனங்கள் அப்பகுதியில் திக்கு முக்காடி போகின்றன. போக்குவரத்து நெரிசல் ஒருபுறம், விபத்து அபாயம் மறுபுறம் என்ற ஆபத்தான சூழல் நிலவுகிறது.

அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க, நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், தேசிய நெடுஞ்சாலை ரோந்து படையினரும் தொடர்ந்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us