/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரு வழிச்சாலையாக மாற்ற ரயில் பயணியர் கோரிக்கை
/
ஒரு வழிச்சாலையாக மாற்ற ரயில் பயணியர் கோரிக்கை
ADDED : ஏப் 23, 2025 09:02 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் இருந்து, ரயில் நிலையத்தை இணைக்க, வசந்த பஜார் சாலை மற்றும் ரயில் நிலைய சாலை என, இரு சாலைகள் உள்ளன. குறுகலான இரு சாலைகளிலும் நுாற்றுக்கணக்கான கடைகள் இருப்பதால், எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.
இச்சாலைகளில் இரு கார்கள் எதிரெதிரே செல்ல முடியாது. இதனால், பரபரப்பான காலை மற்றும் மாலை நேரத்தில், போக்குவரத்து நெரிசலில் சிக்கி ரயில் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ரயில் பயணியரின் நலன் கருதி, மேற்கண்ட இரு சாலைகளை ஒரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.
ஒரு சாலை, ஜி.என்.டி., சாலையில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்கும், மற்றொரு சாலை ரயில் நிலையத்தில் இருந்து ஜி.என்.டி., சாலை வருவதற்கும் என, மாற்ற வேண்டும். அதற்கு, கும்மிடிப்பூண்டி போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.