sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 பாசி படர்ந்த பாதையில் வழுக்கி விழும் பயணியர்

/

 பாசி படர்ந்த பாதையில் வழுக்கி விழும் பயணியர்

 பாசி படர்ந்த பாதையில் வழுக்கி விழும் பயணியர்

 பாசி படர்ந்த பாதையில் வழுக்கி விழும் பயணியர்


ADDED : நவ 28, 2025 03:25 AM

Google News

ADDED : நவ 28, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: பூண்டி கிராமத்தில் உள்ள தொல்லியல் துறையின் பழங்கால பூங்காவிற்கு செல்லும் பாதை, பாசி படர்ந்துள்ளதால் சுற்றுலா பயணியர் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதையை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொல்லியல் துறை சார்பில், பழங்காலத்தை விளக்கும் வகையில், பூண்டி கிராமத்தில், 1985ம் ஆண்டு தொல் பழங்கால அகழ்வைப்பகம் செயல்பட்டு வருகிறது.

பழங்கால மனிதர்களின் வேட்டையாடும் முறை குறித்து விளக்கும் வகையில், அவர்கள் பயன்படுத்திய கருவிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு செல்லும் பாதை முழுதும் பாசி படர்ந்து உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், இந்த பாதையில் நடக்க முடியாத நிலை உள்ளது. சிலர் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பூண்டியில் உள்ள தொல் பழங்கால பூங்கா செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us