sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 குடிநீர், தெருவிளக்கு வசதி கோரி பழங்குடியின மக்கள் முற்றுகை

/

 குடிநீர், தெருவிளக்கு வசதி கோரி பழங்குடியின மக்கள் முற்றுகை

 குடிநீர், தெருவிளக்கு வசதி கோரி பழங்குடியின மக்கள் முற்றுகை

 குடிநீர், தெருவிளக்கு வசதி கோரி பழங்குடியின மக்கள் முற்றுகை


ADDED : டிச 25, 2025 06:56 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: பழங்குடியினர் குடியிருப்புகளில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி, திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

திருத்தணி ஒன்றியம் செருக்கனுார், பங்களாமேடு மற்றும் வீரகநல்லுார் பகத்சிங் நகர் ஆகிய பகுதிகளில், 80க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர், தெரு விளக்கு மற்றும் கால்வாய் வசதி ஏற்படுத்தி தராமல், ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த 75க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள், நேற்று திருத்தணி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.

பின், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என, உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us