ADDED : மார் 15, 2025 06:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில், நேற்று காலை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த 'டி.வி.எஸ்., ஜூபிடர்' வாகனத்தை நிறுத்தினர்.
அதில் பயணம் செய்த கன்னிகைப்பேர் அஜய், 27, திருவள்ளூர் சேட்டு, 22, ஆகியோரை சோதனை செய்ததில், அவர்களிடம் இருந்து, 1.2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், பைக், கஞ்சா, இரண்டு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.