/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா பறிமுதல் இருவர் சிக்கினர்
/
கஞ்சா பறிமுதல் இருவர் சிக்கினர்
ADDED : ஜூலை 27, 2025 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் சா லையில் உள்ள சோதனைச்சாவடியில், பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த விஷால், 22, பாபு, 28, என தெரியவந்தது. அவர்களிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.