/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிராக்டர், பைக் பறிமுதல் இரண்டு பேர் சிக்கினர்
/
டிராக்டர், பைக் பறிமுதல் இரண்டு பேர் சிக்கினர்
ADDED : மே 31, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே போந்தவாக்கம் கிராமத்தில், பாதிரிவேடு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து, ஆந்திர மாநிலம் வரதய்யாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் அஜித், 22, என்பவரை கைது செய்தனர்.
டிராக்டருக்கு வழிகாட்டியபடி இருசக்கர வாகனத்தில் சென்ற பாதிரிவேடு கிராமத்தைச் சேர்ந்த தேவா, 31, என்பவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிவு செய்த பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.