/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் திருட முயற்சி இருவருக்கு 'காப்பு'
/
பைக் திருட முயற்சி இருவருக்கு 'காப்பு'
ADDED : மே 18, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 62. இவர், நேற்று முன்தினம் காலை, அருகே உள்ள கோவில் முன், 'டி.வி.எஸ்., எக்ஸல்' பைக் நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, பைக்கை இரண்டு பேர் திருட முயன்றனர்.
கோவில் பாதுகாவலர் உதவியுடன் அவர்களை பிடித்து, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பட்டாபிராம் ராஜசேகர், 30, போரூர் நவீன், 21, எனத் தெரிந்தது. வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.