ADDED : ஏப் 19, 2025 09:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர், பெரிஞ்சேரி பகுதிகளில், பென்னலுார்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த இரண்டு லாரிகளை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில், திருட்டு மணல் இருந்தது.
இதுகுறித்து, வழக்கு பதிந்த போலீசார், லாரி ஓட்டுனர்களான எல்லம்பேட்டை ராஜேஷ், 35, வடகரை சுரேஷ், 40, ஆகியோரை கைது செய்தனர்.

