/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
9 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
/
9 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
ADDED : அக் 06, 2024 12:57 AM

கும்மிடிப்பூண்டி, தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பம்பாக்கம் அடுத்த எளாவூர் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைந்து உள்ளது. நேற்று அதிகாலை, நெல்லுாரில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தில், போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சந்தேகத்திற்கு இடமாக இருந்த இருவரது உடமைகளை சோதனை செய்தபோது, அதில், ஒன்பது கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தன.
அதையடுத்து இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த அனரல் இஸ்லாம், 28, சபுஜ் ஷேக், 32, என்பது தெரிந்தது.
தொடர் விசாரணையில், சென்னை வழியாக கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரிந்தது.
விசாரணையை தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த, 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.