/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபாட்டில் கடத்திய இருவர் கைது
/
மதுபாட்டில் கடத்திய இருவர் கைது
ADDED : அக் 27, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: ஆர்.கே.பேட்டை மதுவி லக்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார், நேற்று லட்சுமாபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 'ஸ்பிளண்டர் பிளஸ்' இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்தி சோதனை செய்ததில், ஆந்திர மாநிலத்தில் இருந்து 20 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது .
மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 52, அரக்கோணம் சுவால்பேட்டை வெங்கடாசலம், 52 ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

