sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா கடத்திய இருவர் கைது

/

கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது


ADDED : அக் 14, 2024 06:20 AM

Google News

ADDED : அக் 14, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி : ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் தமிழக- - ஆந்திரா எல்லையான பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த வாலிபர்கள் வைத்திருந்த பையில், 500 கிராம் கஞ்சா இருந்தது பறிமுதல் செய்தனர். சென்னை ஆவடியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 23, விஜய், 22 ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us