ADDED : ஜன 28, 2025 08:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது, ஆந்திராவில் இருந்து, சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர்.
அதில், பயணித்த, சென்னை, பாடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 35, பள்ளிக்கரணை ராஜேஷ்குமார், 27, ஆகியோரிடம், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
இருவரும், ஒடிசா மாநிலம், பரம்பூர் பகுதியில் இருந்து, கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.