sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா கடத்திய இருவர் கைது

/

கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது


ADDED : ஜூலை 04, 2025 02:36 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 22 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றி, இருவரை கைது செய்தனர்.

ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று, இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் போலீசார், மீஞ்சூர், மணலி, செங்குன்றம், அத்திப்பட்டு, எண்ணுார் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோழவரம் டோல்கேட் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், நல்லமனார்கோட்டையை சேர்ந்த கார்த்திக், 30, தேவகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன், 28, என்பது தெரிந்தது.

அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us