/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு
/
ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு
ADDED : நவ 24, 2024 08:31 PM
ஆவடி:ஆவடி, காமராஜர் நகர், உடையார் தெருவைச் சேர்ந்தவர் ராஜி, 54; தச்சர். இவருக்கு மனைவி, மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
நேற்று காலை, ஹோட்டலில் சாப்பிட்டு வருவதாக கூறிச் சென்ற ராஜி, ஆவடி - இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற மின்சார ரயிலில் அடிபட்டு, தலை துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி ரயில்வே போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
* ஆவடி அடுத்த பட்டாபிராம், சோராஞ்சேரி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் அருண்குமார், 28; கூலித் தொழிலாளி.
நேற்று முன்தினம், ஆவடி - இந்து கல்லுாரி ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடி ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.