sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பஸ்சில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது

/

பஸ்சில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது

பஸ்சில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது

பஸ்சில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் கைது


ADDED : பிப் 08, 2025 08:59 PM

Google News

ADDED : பிப் 08, 2025 08:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடி வழியாக, திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சமீப காலமாக அதிகளவில் கஞ்சா கடத்தி செல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று, எஸ்.பி., ஸ்ரீநிவாசா பெருமாள் உத்தரவின்படி, தனிப்படை போலீசார் நேற்று அதிகாலையில் பொன்பாடி சோதனைச்சாவடியில் பேருந்துகளில் மட்டும் சோதனை செய்தனர்.

அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக சென்னை கோயம்பேடு நோக்கி செல்லும் அரசு பேருந்து எண்:201 என்ற பேருந்தில், போலீசார் பயணியரிடம் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் மற்றும் ஆண் பயணியின் பைகளில் பதுக்கி வைத்திருந்த, 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், ஆந்திர மாநிலம், புத்துார் தாலுகா, கார்வேட்நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன், 24, ஒடிசா மாநிலம் ஜகதீஷ்சிங்பூர் ஆதிக்குல் பகுதியைச் சேர்ந்த ஸ்வகாதிகா ஜீனா, 20, என, தெரிய வந்தது.

அதை தொடர்ந்து ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் மேற்கண்ட இருவரையும் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us