/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீனவர்களுக்கு மானியத்தில் 'டூ- - வீலர்'
/
மீனவர்களுக்கு மானியத்தில் 'டூ- - வீலர்'
ADDED : நவ 05, 2024 07:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டத்தில், 9 மீனவர்களுக்கு குளிர்சாதன பெட்டியுடன் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சில்லரை மீன் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் 40 சதவீத மானியத்தில் மீனவர்களுக்கு குளிர்சாதன பெட்டியுடன் இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், 9 பேருக்கு 2.70 லட்சம் மானியத்தில் இருசக்கர வாகனத்தை கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். நிகழ்ச்சியில், மீன்வள உதவி இயக்குநர் விஜய் ஆனந்த், மீன்வள ஆய்வாளர் காமீல் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.