ADDED : பிப் 26, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ரயில் நிலைய சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்த கடையின் அருகே, 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவாலங்காடு போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

