sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வர்ணம் பூசப்படாத வேகத்தடை வாகன ஓட்டிகள் அவதி

/

வர்ணம் பூசப்படாத வேகத்தடை வாகன ஓட்டிகள் அவதி

வர்ணம் பூசப்படாத வேகத்தடை வாகன ஓட்டிகள் அவதி

வர்ணம் பூசப்படாத வேகத்தடை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : டிச 31, 2024 01:15 AM

Google News

ADDED : டிச 31, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், நாராயணபுரம் கூட்ரோடு துவங்கி, திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பு பகுதியில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு பள்ளி, அரசு அலுவலகங்கள் மற்றும் வளைவு சாலைகளில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருதி, 11 பகுதிகளில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு, மஞ்சாகுப்பம், நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமலும், அழிந்தும் உள்ளது.

வேகத்தடையின் மீது இரவில் ஒளி பிரதிபலிப்பான் அமைக்கப்படாமல் உள்ளது.

குறிப்பாக, இரவு நேரத்தில் இப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us