sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கால்நடை கிளை நிலையம் அமைக்க வலியுறுத்தல்

/

கால்நடை கிளை நிலையம் அமைக்க வலியுறுத்தல்

கால்நடை கிளை நிலையம் அமைக்க வலியுறுத்தல்

கால்நடை கிளை நிலையம் அமைக்க வலியுறுத்தல்


ADDED : அக் 08, 2025 09:48 PM

Google News

ADDED : அக் 08, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:பெரியகளக்காட்டூரில் கால்நடை கிளை நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியத்தின் பெரியகளக்காட்டூர் ஊராட்சியின் கீழ், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, ஏராளமானோர் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில், 80,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.

தற்போது, கால்நடைகளுக்கான சினை ஊசி போடுதல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு, 8 கி.மீ.,யில் உள்ள திருவாலங்காடு கால்நடை மருத்துவமனைக்கு, கால்நடைகளை அழைத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அவ்வாறு செல்வோர், திருவாலங்காடு ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளதால், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே, பெரியகளக்காட்டூரில் கால்நடை கிளை நிலையம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us