/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வி.ஏ.ஓ., கட்டடம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்
/
வி.ஏ.ஓ., கட்டடம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூலை 14, 2025 01:23 AM

திருவாலங்காடு:பழையனுாரில் சேதமடைந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியம் பழையனுார் ஊராட்சியில், அரசு பள்ளி எதிரே வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு பட்டா, சிட்டா, அடங்கல், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளுக்காக, தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த கட்டடம் கட்டப்பட்டு, 25 ஆண்டுகள் கடந்த நிலையில், கட்டடத்தில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சுவர்களில் ஈரம் படிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, விண்ணப்பிக்க வருவோர் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.
எனவே, சேதமடைந்த வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.