sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்

/

வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்

வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் துவக்கம்


ADDED : மே 11, 2025 09:43 PM

Google News

ADDED : மே 11, 2025 09:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி:வட காஞ்சி என்று அழைக்கப்படும் மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.

பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக, நேற்று முன்தினம் இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. நேற்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு, வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பின், கொடியேற்றம் நடந்தது.

இதையடுத்து, கொடி மரத்திற்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. வரதராஜ பெருமாள் நான்கு மாடவீதிகளில் பவனி சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.

தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெற இருக்கும் பிரம்மோற்சவத்தில், முக்கிய நிகழ்வாக மூன்றாம் நாள் கருட சேவையும், ஏழாம் நாள் ரத உற்கசவமும் நடைபெறும்.






      Dinamalar
      Follow us