/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமன் குரங்கு தப்பித்த அதிர்ச்சியில் வண்டலுார் பெண் ஊழியர் பலி
/
அனுமன் குரங்கு தப்பித்த அதிர்ச்சியில் வண்டலுார் பெண் ஊழியர் பலி
அனுமன் குரங்கு தப்பித்த அதிர்ச்சியில் வண்டலுார் பெண் ஊழியர் பலி
அனுமன் குரங்கு தப்பித்த அதிர்ச்சியில் வண்டலுார் பெண் ஊழியர் பலி
ADDED : பிப் 15, 2024 12:16 AM
தாம்பரம்:வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து, 10 அனுமன் குரங்குகள் கொண்டு வரப்பட்டன.
இதில், இரண்டு குரங்குகள் நேற்று முன்தினம் காலை, உணவு வைக்கும் போது, கூண்டில் இருந்து தப்பித்து காட்டுப்பகுதிக்கு சென்றன.
அப்போது, ஜான் என்ற நிரந்த ஊழியரும், சுகுணா, 45, என்ற தற்காலிக பெண் ஊழியரும் பணியில் இருந்தனர். இரண்டு நாட்களாகியும், குரங்குகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்த சுகுணா, உணவு அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை திடீரென மயங்கி விழுந்தார். செங்கல்பட்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சுகுணா இறந்தது தெரியவந்தது.
இச்சம்பவம், பூங்கா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூங்கா அதிகாரிகள், டார்ச்சர் செய்ததாலேயே மன உளைச்சல் ஏற்பட்டு இறந்ததாக, பூங்கா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சுகுணா, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு, ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இன்சூரன்ஸ் தொகையை பெற்றுத்தர பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தற்காலிக ஊழியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

