sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

இடியும் அபாய நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

/

இடியும் அபாய நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

இடியும் அபாய நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்

இடியும் அபாய நிலையில் வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம்


ADDED : செப் 27, 2025 11:04 PM

Google News

ADDED : செப் 27, 2025 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே.பேட்டை:இடியும் அபாய நிலையில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என, ஸ்ரீவிலாசபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் ஸ்ரீவிலாசபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வி.ஏ.ஓ., அலுவலகம் பராமரிப்பின்றி, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதன் கான்கிரீட் கூரை, முன்வாயிலில் உள்ள துாண்கள், பயனாளிகள் காத்திருக்கும் திண்ணை உள்ளிட்ட அனைத்து பகுதியுமே சேதமடைந்துள்ளன.

இதனால், இங்கு பணியாற்றும் வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர் மட்டுமின்றி, அப்பகுதி மக்களும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

ஐந்து ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால், இந்த அலுவலக கட்டடத்தை இடித்து அகற்றவும், புதிய கட்டடம் கட்டவும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

எனவே, வி.ஏ.ஓ., மற்றும் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கருதி, சேதமடைந்த கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிதாக கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us