sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் 30ம் தேதி ஏலம்

/

போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் 30ம் தேதி ஏலம்

போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் 30ம் தேதி ஏலம்

போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் 30ம் தேதி ஏலம்


ADDED : மே 27, 2025 08:19 PM

Google News

ADDED : மே 27, 2025 08:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 30ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின் போது பொது விநியோகத் திட்ட பொருட்களுடன் கூடிய வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேற்கண்ட வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 80 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வரும் 29ம் தேதிக்குள் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டும், அவற்றின் உரிமையாளர்கள் மீட்டுச் செல்லவில்லை. இதையடுத்து, உரிமைக் கோரப்படாத வாகனங்களாக கருதி அரசுக்கு ஆதாயம் செய்யும் வகையில், திருவள்ளூர் குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வு துறை அலுவலகத்தில், டூ- வீலர், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என, 70 வாகனங்கள் 30 ம் தேதி காலை 10 மணியளவில் ஏலம் விடப்படும்.

மேலும் சென்னை சரக குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தொடர்புடைய 10 வாகனங்கள் 31 ம் தேதி சென்னை, சூரப்பட்டு வேலம்மாள் பள்ளி எதிரில் பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us