/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் மட்கி வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
/
கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் மட்கி வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் மட்கி வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையத்தில் மட்கி வீணாகும் பறிமுதல் வாகனங்கள்
ADDED : ஜன 02, 2025 01:27 AM

திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது, குற்றத்துக்கு பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
விபத்து மற்றும் சட்ட விரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் போன்றவையும் கைப்பற்றப்படுகின்றன.
இவ்வாறு பிடிபடும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், கனகம்மாசத்திரம் போலீஸ் நிலையம் எதிரே மற்றும் அதன் வளாகத்தில், பல ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
அவை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மட்கி வீணாகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விடாமல் வைத்திருப்பதால், வாகனங்கள் வீணாகின்றன. மேலும், ஏலம் விடாததால், அரசுக்கு கிடைக்கும் வருவாயும் வீணாகிறது.
துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை ஏலம் விட, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.