/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடை கவலைக்கிடம் வெங்கத்துார் பயணியர் அவதி
/
நிழற்குடை கவலைக்கிடம் வெங்கத்துார் பயணியர் அவதி
ADDED : நவ 13, 2024 01:53 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்டது, வெங்கத்துார் ஊராட்சி. இங்குள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, இப்பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் திருவள்ளூர் மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை முறையான பராமரிப்பு இல்லாத்தால், சேதமடைந்து சாய்ந்து விழுந்துள்ளது.
இதனால், இப்பகுதிவாசிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வெயில் மற்றும் மழை நேரங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்து பரிதாப நிலையில் உள்ள நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வெங்கத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.