/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பிச்சாட்டூர் ஏரியில் நீர் திறப்பு குறைப்பு
/
பிச்சாட்டூர் ஏரியில் நீர் திறப்பு குறைப்பு
ADDED : டிச 14, 2024 09:09 PM
ஊத்துக்கோட்டை:ஆரணி ஆற்றின் நடுவே, ஆந்திர மாநிலத்தில் பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சேமிக்கப்படுகிறது. மழைநீர் முக்கிய நீர் ஆதாரம். வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததால், தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் ஏரியின் முழு கொள்ளளவை எட்டும் நிலைய அடைந்தது. இரு தினங்களுக்கு முன், வினாடிக்கு, 5,200 கன அடி வீதம் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் வினாடிக்கு, 5,600 கன அடி வீதம் மதகு வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
ஏரியின் மொத்த கொள்ளளவான, 1.81 டி.எம்.சி.,யில் தற்போது, 1.61 டி.எம்.சி., உள்ளது. நீர்மட்டம், 31 அடியில், 29.30 அடி நீர் உள்ளது. ஏரிக்கு மழைநீர் வினாடிக்கு, 2,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. மழை நின்றதால் நீர்வரத்து குறைந்ததால், திறக்கப்படும் நீரின் அளவு, 1,600 கன அடியாக குறைக்கப்பட்டது.