/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைப்பில் நீர்வள துறை அதிகாரிகள் அலட்சியம்
/
கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைப்பில் நீர்வள துறை அதிகாரிகள் அலட்சியம்
கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைப்பில் நீர்வள துறை அதிகாரிகள் அலட்சியம்
கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைப்பில் நீர்வள துறை அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஆக 29, 2025 12:38 AM

திருமழிசை, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில், கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், சேதப்படுத்தப்பட்ட கரைகள் சீரமைப்பில், நீர்வள ஆதாராத் துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு, பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து உருவாகும் கூவம் ஆறு, அரண்வாயல் பகுதியில் கிருஷ்ணா கால்வாயாக பிரிந்து, தண்டலம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
இதில், தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கிருஷ்ணா கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து வருகிறது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடைந்து வருவதால், சென்னை மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, திருவள்ளூர் நீர்வள ஆதாரத் துறையினர், கிருஷ்ணா கால்வாய்க்கு தனியார் மருத்துவ கல்லுாரியில் இருந்து கழிவுநீர் வரும் பகுதியில் கரைகளை முழுதும் சீரமைத்தனர்.
ஆனால், தொழிற்சாலை பகுதியில் இருந்து கழிவுநீர் வரும் பகுதியில், சேதமடைந்த கரையை பெயரளவிற்கு தடுப்புகள் அமைத்து சீரமைத்துள்ளனர். இது, சமூக ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, கிருஷ்ணா கால்வாய் பகுதியில் கழிவுநீர் கலப்பதை முழுதும் தடுத்து நிறுத்தும் வகையில், கரைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.