ADDED : ஜன 17, 2024 08:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:கூலி உயர்வு, வீட்டு மனை பட்டா, ஓய்வூதியம், வாங்கும் கூலி அடிப்படையில் வருவாய் சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளுடன், நெசவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல்கட்டமாக பொதட்டூர்பேட்டையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இன்று ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தில், அறிஞர் அண்ணா நெசவாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதை தொடர்ந்து, வரும் 21ம் தேதி ஸ்ரீகாளிகாபுரத்திலும் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.