/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
143 பயனாளிகளுக்குரூ.1.88 கோடி நல உதவி
/
143 பயனாளிகளுக்குரூ.1.88 கோடி நல உதவி
ADDED : டிச 07, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர், திருவள்ளுரில் நடந்த விழாவில், 143 பயனாளிகளுக்கு 1.88 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
திருவள்ளூரில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
சிறுபான்மையினர் நல துறை அமைச்சர் நாசர் பங்கேற்று, இலவச வீட்டுமனை பட்டா, தையல் இயந்திரம் என, 143 பயனாளிகளுக்கு 1.88 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.