sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணி என்னாச்சு?

/

நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணி என்னாச்சு?

நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணி என்னாச்சு?

நரசிங்க பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணி என்னாச்சு?


ADDED : ஏப் 25, 2025 02:21 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரசிங்கபுரம்:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியில் மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.

மரகதவல்லி தாயாரை அணைத்தபடி, ஏழரை அடி உயரத்தில் காட்சி தரும் மூலவர் நரசிம்மரை தரிசித்தால், கணவன் - மனைவி ஒற்றுமை மற்றும் செல்வம் செழிக்கும் என்பதால், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தினமும் வருகின்றனர்.

நரசிம்மரை ஒன்பது சுவாதி நட்சத்திர நாட்கள் வணங்கினால் தீராத கடன், நோய், திருமண தடை உள்ளிட்ட பிரச்னைகள் சரியாகும் என்பது நம்பிக்கை. இக்கோவிலில், 16 ஆண்டுகளுக்கு பின், 2024 மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையத் துறையினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, லட்சுமி நரசிம்மர் கோவில், சென்னையைச் சேர்ந்த உபயதாரர் லட்சுமி நரசிம்மன் என்பவர் நிதியின் கீழ், 25.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, ஹிந்து அறநிலையத் துறை உத்தரவின்படி, கடந்த 2023 ஜூலை 5ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

ஆனால், பணிகள் துவங்கி இரு ஆண்டுகளான நிலையில், ஓராண்டாக எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே, ஹிந்து அறநிலையத் துறையினர் லட்சுமி நரசிம்மர் கோவிலில், கிடப்பில் போடப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விரைவில் நிறைவேற்றி, கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us