sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சாமந்தவாடாவிற்கு எப்போது கிடைக்கும் நிரந்தர தரைப்பாலம்?

/

சாமந்தவாடாவிற்கு எப்போது கிடைக்கும் நிரந்தர தரைப்பாலம்?

சாமந்தவாடாவிற்கு எப்போது கிடைக்கும் நிரந்தர தரைப்பாலம்?

சாமந்தவாடாவிற்கு எப்போது கிடைக்கும் நிரந்தர தரைப்பாலம்?


ADDED : ஜூலை 05, 2025 11:03 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பருவமழையின் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் நிரந்தரமாக சீரமைக்கப்படாததால், கிராமத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு பெருமாநல்லுார், நெடியம், சாமந்தவாடா வழியாக பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.

இதில், நெடியம், சாமந்தவாடா பகுதியில் தரைப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டு தரைப்பாலங்களும் பலமுறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. கடந்தாண்டு பருவமழையின் போதும், சாமந்தவாடா தரைப்பாலம், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால், சாமந்தவாடாவில் இருந்து, ஞானம்மாள்பட்டடை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால், புண்ணியம் வழியாக மாற்றுப்பாதையில், 6 கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு, பள்ளிப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த தரைப்பாலம் தற்காலிகமாகமணல் மூட்டைகளால் சீரமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் பருவமழையின் போது, வெள்ள சீற்றத்தை தாக்குப்பிடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, சாமந்தவாடா தரைப்பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us