sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு எல்லையில் கண்காணிப்பு எப்போது?

/

ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு எல்லையில் கண்காணிப்பு எப்போது?

ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு எல்லையில் கண்காணிப்பு எப்போது?

ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு எல்லையில் கண்காணிப்பு எப்போது?


ADDED : மே 12, 2025 12:36 AM

Google News

ADDED : மே 12, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு, கும்மிடிப்பூண்டி மார்க்கமாக அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. சிறிய அளவில் கடத்துபவர்கள் புறநகர் மின்சார ரயில்களிலும், டன் கணக்கில் கடத்துபவர்கள், சாலை மார்க்கமாகவும் கடத்தி செல்கின்றனர்.

சாலை மார்க்கமாக கடத்துபவர்கள் பெரும்பாலும், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனங்களில் கடத்தி செல்கின்றனர். அரிசி கடத்தலுக்கு சரக்கு ஆட்டோ முதல் மினி லாரி வரை பயன்படுத்தி வருகின்றனர்.

ரகசிய தகவல் கிடைத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட வாகனத்தை போலீசார் மடக்கி பிடித்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், மறைமுகமாக நடக்கும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள தமிழக ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் எவ்வித சோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இதனால், தமிழகத்தில் இருந்து மேற்கண்ட சோதனைச்சாவடி வழியாக தினமும் டன் கணக்கில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் திசையில் உள்ள சோதனைச்சாவடியில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார், 24 மணி நேரமும் கண்காணித்து, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us