/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைப்பது எப்போது?
/
பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைப்பது எப்போது?
ADDED : மே 26, 2025 11:34 PM

திருவாலங்காடு :திருவாலங்காடு ஒன்றியம் கூர்மவிலாசபுரம் ஊராட்சியில், கனகம்மாசத்திரம் -- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் அரசு துவக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் தபால் நிலையம், ஊராட்சி அலுவலகம், நூலகம் என, ஒருங்கிணைந்த வளாகமாக செயல்படுகிறது.
இந்த வளாகத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுச்சுவரை சமூக விரோதிகள் சிறுக சிறுக உடைத்ததால், தற்போது சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதமடைந்து, உடைந்து விழும் என்ற அபாய நிலையில் உள்ளது.
மேலும், பள்ளி மாணவர்கள் விளையாடும் போது அசம்பாவிதம் நிகழும் வாய்ப்பு உள்ளதால், பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தில் உள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.