/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அவசரகால சிகிச்சை மருத்துவமனை திருமழிசையில் வருவது எப்போது?
/
அவசரகால சிகிச்சை மருத்துவமனை திருமழிசையில் வருவது எப்போது?
அவசரகால சிகிச்சை மருத்துவமனை திருமழிசையில் வருவது எப்போது?
அவசரகால சிகிச்சை மருத்துவமனை திருமழிசையில் வருவது எப்போது?
ADDED : டிச 10, 2024 01:01 AM

திருமழிசை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது திருமழிசை பேரூராட்சி.
தற்போது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால், விபத்தில் சிக்கும் பலர் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர்.
இதையடுத்து, 2022ல் துவக்கப்பட்ட, தமிழக அரசின், 'நம்மை காப்போம் 48' என்ற திட்டத்தின் கீழ் அரசு உத்தரவுப்படி 4 கோடி ரூபாய் மதிப்பில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனை புதிய கட்டடம் கட்டும் பணி, திருமழிசை தொழிற்பேட்டையில் துவங்கியது.
பணிகள் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்று வரை மருத்துவமனை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. மேலும், மருத்துவமனைக்கு முறையான சாலை வசதி இல்லை. இரவு நேரங்களில், மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வருவதோடு சுற்றி சேற்றில் சிக்கி வீணாகி வருகிறது.
எனவே, திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு, சாலை உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய விபத்து மற்றும் அவசரகால மருத்துவமனை குறித்து அரசுக்கு தெரிவித்துள்ளோம். இதையடுத்து, அரசு மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் மற்றும் சாலை சீரமைப்பு வசதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, சாலை, சுற்றுச்சுவர் பணிகள் நிறைவடைந்தவுடன் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்படும். அதை தொடர்ந்து பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவமனை திறப்பு விழா நடத்தி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

