/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆபத்தான சாலை வளைவு தடுப்பு அமைக்கப்படுமா?
/
ஆபத்தான சாலை வளைவு தடுப்பு அமைக்கப்படுமா?
ADDED : ஏப் 08, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, திருவாலங்காடு --- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், சின்னம்மாபேட்டை அருகே ஒரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து, பாகசாலை செல்லும் சாலையில், மூன்று இடங்களில் அபாயகரமான சாலை வளைவுகள் உள்ளன.
வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வளைவு இருப்பதற்கான அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, வளைவுகள் உள்ள இடத்தில், சாலையோர தடுப்பு அமைக்க வேண்டும். மேலும், வளைவுகள் இருப்பதற்கான ஒளிரும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.