/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
/
கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
கும்மிடி - திருவள்ளூர் இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
ADDED : ஆக 28, 2025 01:46 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் இருந்து மாவட்ட தலைநகரமான திருவள்ளூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழில் நகரமான கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து அலுவல்கள் மற்றும் கோரிக்கை தொடர்பாக தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள், மாவட்ட தலைநகரான திருவள்ளூருக்கு சென்று வருகின்றனர். இச்சாலை மார்க்கமாக மட்டுமே திருவள்ளூர் செல்ல முடியும் என்பதால், பேருந்துகளை நம்பியே உள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து, காலை 7:15 மணி, 11:15 மணி, மாலை 3:30 மணி, இரவு 8:00 மணி என, நான்கு முறை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சேவை போதுமானதாக இல்லை.
கும்மிடிப்பூண்டி மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படாததால், பகுதிமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, காலை, மாலை நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும். அதன் வாயிலாக, திருவள்ளூர் மட்டுமின்றி சிறுவாபுரி, ஆரணி, பெரியபாளையம், வெங்கல் செல்லும் பயணியரும் பயனடைவர் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.