sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி- - நாகலாபுரம் தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

/

திருத்தணி- - நாகலாபுரம் தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

திருத்தணி- - நாகலாபுரம் தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

திருத்தணி- - நாகலாபுரம் தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?


ADDED : செப் 11, 2025 09:47 PM

Google News

ADDED : செப் 11, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி - நாகலாபுரம் வழித்தடத்தில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என, பயணியர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்தணி- - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் வேலஞ்சேரி, தாழவேடு, நெமிலி, என்.என்.கண்டிகை, சிவாடா உட்பட 75க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள், அத்தியாவசிய பணிகளுக்காக திருத்தணிக்கு வந்து செல்கின்றனர்.

மேலும், திருத்தணி முருகன் கோவிலுக்கும், நாகலாபுரம் வேதநாராயணசுவாமி பெருமாள் கோவிலுக்கும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும், கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், திருத்தணி - நாகலாபுரம் வழித்தடத்தில் ஒரு அரசு பேருந்தும், இரண்டு தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்குவதால், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். மாணவ - மாணவியர் குறித்த நேரத்திற்கு பள்ளி, கல்லுாரிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

பள்ளி மாணவர்கள் நலன் கருதி, திருத்தணி - சிவாடா வரை மட்டுமே, காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகளில் அதிகளவில் மக்கள் மற்றும் மாணவர்கள் பயணிப்பதால், ஆபத்தான நிலையில் படிகளிலும், கூரைகளிலும் நின்று பயணம் செய்து வருகின்றனர்.

எனவே, திருத்தணி - நாகலாபுரம் வழித்தடத்தில், கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us